ரூ.9.54 லட்சத்தில் டாடா எக்ஸ்பிரஸ்-டி எலக்ட்ரிக் கார் வெளியானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய Xpres பயணிகள் கார் பிராண்டில் வெளியிடப்பட்டுள்ள முதல் மாடலாக XpresT EV விலை ரூ.9.54 லட்சம் முதல் ரூ.10.64 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புதிய மின்சார பேட்டரி காருக்கு ஒன்றிய அரசு வழங்குகின்ற Fame 2 ஊக்கத்தொகை சலுகை உட்படவே விற்பனையக விலை அமைந்துள்ளது. குறிப்பாக எக்ஸ்பிரஸ் டி மாடல் மொபிலிட்டி சேவைகள், கார்ப்பரேட் மற்றும் அரசு, ஃப்ளீட் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக டாடா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய எக்ஸ்பிரஸ் பேட்ஜைக் கொண்டிருக்கும் பாடல்கள், தனிநபர் பயன்பாட்டிற்கும் விற்கப்படும் வாகளங்களில் இருந்து மாறுபட்டதாக வர்த்தகரீதியான மாடல் விளங்கும்.

டாடா XpresT மின்சார கார் நுட்பவிபரம்

பேஸ் வேரியண்டில் உள்ள XM,XZ என இரண்டும் 16.5 கிலோவாட் பேட்டரி பேக் உடன் 165 கிமீ ரேஞ்சுடன் வருகின்றது. அதே நேரத்தில் டாப் மாடல்கள் 213 கிமீ ரேஞ்சு பெற்று 21.5 கிலோவாட் பேட்டரி உடன் வந்துள்ளது.

30 kW (40.2 BHP) மின்சார மோட்டாரிலிருந்து, 105 Nm டார்க் உருவாக்குகிறது. இதில் ஒரு வேக டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஈகோ மற்றும் ‘ஸ்போர்ட்’ டிரைவ் மோட்களுடன் வரும் எக்ஸ்பிரஸ் டி மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ ஆகும்.

90 நிமிடங்களில் 0-80 சதவிகிதம் சார்ஜிங்கை 16.5 கிலோவாட் பேட்டரியும் மற்றும் 21.5 கிலோவாட்டிற்கு 110 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம் என்று டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது. விரைவு சார்ஜிங் அல்லது 15A சார்ஜர் போதுமானதாகும்.

Tata XpresT EV price list

Variant Price
XpresT 165 XM Rs. 9.54 lakhs
XpresT 165 XZ Rs. 10.04 lakhs
XpresT 213 XM+ Rs. 10.14 lakhs
XpresT 213 XZ+ Rs. 10.64 lakhs

 

Price are ex-showroom and inclusive of Fame 2 incentive

ஆஃப்ரோடுக்கு புதிய ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி சிறப்புகள்

வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி காரில் டிஃப்ரென்ஷியல் லாக்கிங் வசதியுடன் கூடிய ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் இணைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூர்க்கா எஸ்யூவி சிறப்புகள்

அக்டோபர் 15 ஆம் தேதி முதல் டெலிவரி துவங்கப்பட உள்ள கூர்க்காவின் தோற்ற அமைப்பு முன்பை போலவே வெளிப்படுத்தினாலும் பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, நேர்த்தியான கிரில் அமைப்பு, புதிய பம்பர், அகலமான பின்புற விண்டோஸ் பெற்றுள்ளது.

இன்டிரியரில் மிக சிறப்பான டூயல் டோன் நிறங்கள் கொடுக்கப்பட்டு கிளஸ்ட்டர், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்ஷனும் இணைக்கப்பட்டு, முந்தைய பெஞ்ச் இருக்கைக்கு மாற்றாக கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியுடன் ப்ளூடூத் வழியாக அழைப்புகளை இணைக்கவும், டில்ட் மற்றும் அட்ஜஸ்ட் ஸ்டீயரிங், பின்புற இருக்கைகளுக்கான தனிப்பட்ட ஆர்ம் ரெஸ்ட்ஸ், நான்கு பேருக்கும் யூஎஸ்பி சார்ஜிங் சாக்கெட்டுகள், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், ஏர் கண்டிஷனிங், டிஆர்எல் உடன் எல்இடி முகப்பு விளக்கு, பனி விளக்கு மற்றும் கார்னிங் விளக்குகள் ஆகியவை உள்ளன.

90 ஹெச்பி பவரை வழங்குகின்ற 2.6 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் மட்டும் பெற்று 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்டிருக்கும். ஆனால் போட்டியாளரான தார் கூடுதல் பவருடன் பெட்ரோல், டீசல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக், மேனுவல் கியர்பாக்சினை பெற்று 4X4 டிரைவ் ஆப்ஷனும் உள்ளது.

பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்ட் சீட் லாக் மற்றும் டயர் பிரஷர் மானிட்டல் அமைப்பு ஆகியவற்றுடன் வந்துள்ளது.

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் புதிய தலைமுறை கூர்க்காவுக்கு 3 ஆண்டுகள் அல்லது 1.50 லட்சம் கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது.

 

இந்தியாவில் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனையில் சாதனை

இந்திய பயணிகள் கார் சந்தையில் கடந்த 16 வருடங்களாக விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 25 லட்சத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் கான்செப்ட் எஸ் என்ற பெயரில் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது.

16 ஆண்டுகள்.., 25 லட்சம் ஸ்விஃப்ட் கார்கள்

மே 25, 2005 அன்று மாருதி சுசூகி ஸ்விஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 16 ஆண்டுகளில், மூன்று முறை முற்றிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. முதல் தலைமுறை ஸ்விஃப்ட் அதன் முதல் 5 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்ய 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இரண்டாவது தலைமுறை ஸ்விஃப்ட் 2010 வெளியாகி 2013 ஆம் ஆண்டில் 10 லட்சம் யூனிட் விற்பனையை தாண்டியது. அடுத்து, மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டது, அதே ஆண்டில் 20 லட்சம் விற்பனை மைல்கல்லை தாண்டியது. மீதமுள்ள 5 லட்சம் அலகுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விற்பனை சாதனை பற்றி மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) ஷாங்க் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், “மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஒவ்வொரு தலைமுறை இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தமானகாக விளங்கும் நிலையில் 25 லட்சம் அல்லது 2.5 மில்லியனுக்கும் அதிகமான ஸ்விஃப்ட் பிரியர்களின் இதயங்களை வென்றுள்ளது. FY20-21 நிதி ஆண்டில் விற்பனையில் முதன்மையான கார் என்ற பெருமையுடன், ஸ்போர்ட்டிவ் ஸ்விஃப்ட் தோற்றம் மற்றும் செயல்திறனுடன் ஒரு புகழ்பெற்ற பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. அவர் மேலும் கூறுகையில், 35 வயதிற்குட்பட்ட 52% க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக ஸ்விஃப்ட் விளங்குகின்றது.

எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு இல்லாமல் நாங்கள் இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்திருக்க முடியாது.

செப்டம்பர் 16.., டிவிஎஸ் ஃபியரோ 125 அல்லது ரெட்ரான் பைக் வருகையா.?

125சிசி சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபியரோ 125 அல்லது ரெட்ரான் அல்லது ரைடர் பைக்கின் டீசர் முதன்முறையாக வெளியாகியுள்ள நிலையில் விற்பனைக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் 125சிசி பைக் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளாமர் 125, சூப்பர் ஸ்ப்ளெண்டர், ஹோண்டா ஷைன் 125, எஸ்பி 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 போன்ற மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் டிவிஎஸ் நிறுவனம் 125சிசி பைக்கினை வெளியிடுவதனை உறுதி செய்திருந்த நிலையில் தற்போது டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில் மிகவும் சக்திவாய்ந்த என்ஜினாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அனேகமாக 125சிசி அல்லது 150சிசி என்ஜினாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஸ்டைலிஷான எல்இடி ஹைட்லைட் உடன் C-`வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள், எல்இடி டெயில் விளக்கு, டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளியிடப்பட்டுள்ள டீசரில் சற்று வித்தியசமான ஸ்டைல வெளிப்படுத்தும் பெட்ரோல் டேங்க் உடன் ஸ்பிளிட் சீட் கிடைக்கப் பெற்றுள்ளதால், இரு விதமான இருக்கை ஆப்ஷனை பெறக்கூடும்.

சிஎன்ஜி ஆப்ஷனில் டாடா 407 விற்பனைக்கு வெளியானது

35 ஆண்டுகளுக்கு மேலாக விற்பனையில் உள்ள டாடா 407 டிரக்கில் கூடுதலாக சிஎன்ஜி வேரியண்ட் மாடல் ரூ.12.07 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற டீசல் 407 மாடலை விட 35 % கூடுதல் லாபத்தை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டாடா 407 சிறப்புகள்

இந்தியாவில் கிடைக்கின்ற இடைநிலை மற்றும் இலகுரக வர்த்தக வாகன (I & LCV) பிரிவில் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்கும் 407 லைட் லாரியை டாடா மோட்டார் இதுவரை, டீசல் எஞ்சினுடன் மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், இப்பொழுது எரிபொருள் சிக்கனம் மற்றும் மாசு உமிழ்வுக்கு தீர்வும் கானும் வகையில் சிஎன்ஜி வசதியுடன் வெளியிட்டுள்ளது.

டாடா 407 சிஎன்ஜி டிரக்கிற்க்கு 3.8 லிட்டர் சிஎன்ஜி எஞ்சின் SGI இன்ஜின் தொழில்நுட்பத்தை பெற்று அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இதன் டார்க் 285 என்எம் சக்தியை உருவாக்குகிறது. அதிகபட்சமாக 180 லிட்டர் எரிபொருள் கலனை கொண்டுள்ள டிரக்கில் G400 5 ஸ்பீடு மேனுவல் சின்க்ரோமேஷ் கியர்பாக்ஸ் மூலம் இயக்கப்படுகின்றது. டாடா 407 டிரக்கின் மொத்த வாகன எடை (GVW) உடன் 4,995 கிலோ மற்றும் 10 அடி நீளம் பெற்ற சுமை ஏற்றும் தளத்துடன் கிடைக்கிறது. எனவே, இது அதிக சுமை தாங்கும் திறனை வழங்குகிறது.

டாடா 407 லாரியில் செமி-ஃபார்வர்ட் கண்ட்ரோல் (SFC) கேபினைப் பெற்றுள்ள நிலையில் சிறந்த பாதுகாப்பிற்காக உயர் தர எஃக்குடன் கட்டப்பட்டுள்ளது. முன் பாராபோலிக் சஸ்பென்ஷனுடன் வந்துள்ளது. கிளட்ச் மற்றும் கியர் ஷிப்ட் முயற்சியைக் கணிசமாகக் குறைக்கிறது மற்றும் குறைந்த NVH அளவுகளை வழங்குகிறது . மற்ற வசதிகளைப் பொறுத்தவரை, கேபினில் யூஎஸ்பி மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் ப்ளாபங்க்ட் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த 407 டிரக்கின் மேலாண்மை வசதிக்காக Fleet Edge தளத்துடன் வருகிறது. 2 வருட இலவச சந்தாவுடன். டாடா 407 சிஎன்ஜியும் 3 ஆண்டுகள் அல்லது 3 லட்சம் கிலோமீட்டர் உத்தரவாதத்துடன் வருகிறது.

 

2021 ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி காரின் அறிமுக விபரம்

நீண்ட காத்திருப்புக்கு பின்னர் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள மேம்பட்ட புதிய ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி காரில்  இடம்பெற உள்ள முக்கிய அம்சங்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் கோவிட்-19 பரவலின் காரணமாக தொடர்ந்து விற்பனைக்கு வெளியிடுவதனை இந்நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது.

90 ஹெச்பி பவரை வழங்குகின்ற 2.6 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் மட்டும் பெற்று 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்டிருக்கும். ஆனால் போட்டியாளரான தார் கூடுதல் பவருடன் பெட்ரோல், டீசல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக், மேனுவல் கியர்பாக்சினை பெற்று 4X4 டிரைவ் ஆப்ஷனும் உள்ளது.

ஃபோர்ஸ் கூர்க்கா தோற்ற அமைப்பில் முன்புற பம்பர் புதுப்பிக்கப்பட்ட, எல்இடி டி.ஆர்.எல், எல்இடி டெயில் விளக்கு, புதிய டிசைன் அலாய் வீல், மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஆரஞ்சு நிறம் பெற்றுள்ளது. இன்டிரியரில் மேம்பட்ட டேஸ்போர்டு கொடுக்கப்பட்டு தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டிருக்கும்.

2021 ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி காரின் விலை ரூ.10 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2021 எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி காரின் எதிர்பார்ப்புகள்

கிரெட்டா, செல்டோஸ், கிக்ஸ், டஸ்ட்டர் மற்றும் குஷாக் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை எதிர்கொள்ளும் வகையில் எம்ஜி மோட்டார் ஆஸ்டர் எஸ்யூவி விற்பனைக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில் இதன் முக்கிய சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் விற்பனையில் உள்ள இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் அடிப்படையிலான மாடலை Astor என பெயரிடப்பட்ட இரண்டு பெட்ரோல் என்ஜின் பெற்ற மாடலாக வரவுள்ளது. ஹெக்டர் எஸ்யூவி காரின் கீழாக நிலைநிறுத்தப்பட உள்ள ஆஸ்டர் 4.3 மீட்டர் நீளம் கொண்டதாக விளங்குகின்றது.

எம்ஜி ஆஸ்டருக்கான என்ஜின் ஆப்ஷனில் 120 ஹெச்பி பவர் மற்றும் 150 என்எம், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் எதிர்பார்க்கப்படும் நிலையில் மிகவும் சக்திவாய்ந்த, 163 ஹெச்பி பவர் மற்றும் 230 என்எம், 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்டருக்கான கியர்பாக்ஸ் விருப்பங்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்ஜியின் குளோஸ்டர் எஸ்யூவி காரில் உள்ளதை போன்றே Level-2 ADAS (Advanced Driver Assistance Systems) சிஸ்டத்தை அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம்ஸ் பிரிவில் நெடுந்தொலைவு பயணத்தில் உதவுகின்ற ஆடாப்ட்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அல்ட்ராசோனிக் சென்சாரின் உதவியுடன் செயல்படும் தானியங்கி பார்க்கிங் அசிஸ்ட், முன்புற மோதலை தடுக்கம் வசதி, ஆட்டோமேட்டிக் அவசர பிரேக்கிங் வசதி, பிளைன்ட் ஸ்பாட் அறிதல் மற்றும் லேன் மாறுவதனை கேமரா உதவியுடன் எச்சரிக்கும் லேன் வார்னிங் வசதியும் உள்ளது.

எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி காரின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் அமைய வாய்ப்புள்ளது.

இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்தும் ஃபோர்டு இந்தியா

ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது பயணிகள் கார் உற்பத்தியை முழுமையாக இந்தியாவில் நிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. சென்னை மறைமலை நகர் மற்றும் சனந்த என இரு ஆலைகளை மூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1994 ஆம் ஆண்டில் இந்தியாவில் நுழைந்த முதல் பண்ணாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம், பிரசத்தி பெற்ற எண்டோவர், ஈக்கோஸ்போர்ட், ஃபிகோ என பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகின்றது. சென்னை மற்றும் சனந்த ஆலையில் ஆண்டுக்கு 4,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. ஆனால் ஆண்டுக்கு 80,000 வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்யும் நிலையில் அதில் 50 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

உற்பத்தி நிறுத்தம்.., ஆனால் விற்பனை தொடரும்..

இந்தியாவில் உள்ள ஆலைகளில் கார்களின் உற்பத்தியை நிறுத்திக் கொள்ள உள்ள நிலையில், சர்வதேச அளவில் இருந்து கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஃபோர்டு திட்டமிட்டிருந்த நிலையில் கூட்டணி தோல்வியை தழுவியதை தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தியை ஃபோர்டு நிறுத்த உள்ளது.

பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்பாடுகளில் கவனம் தொடர்ந்து செலும்ம உள்ளது. ஃபோர்டின் இரண்டாவது பெரிய ஊதியம் பெறும் பணியாளர்களை கொண்டதாக இந்தியா இருக்கின்ற நிலையில் உற்பத்தியைத் Q2 2022 வரை ஏற்றுமதி செய்வதாகவும் நிறுவனம் அதன் வெளியீட்டின் மூலம் கூறியுள்ளது.

இருப்பினும், ஃபோர்டு சுமார் 4000 ஊழியர்களை வெளியேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து நியாயமான தீர்வைத் திட்டமிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் உற்பத்தியை மூடுவதனால் நிச்சயமாக உரிமையாளர்களர்கள் பாதிப்புகளை எதிர்கொள்ளுவார்கள்.இருந்த போதும் தொடர்ந்து அனைத்து சர்வீஸ் , உதிரிபாகங்கள் வழங்குவதுடன், பெரும்பாலான பிரீமியம் கார்களை இறக்குமதி செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. எனவே, உயர் ரக ஃபோர்டு கார்களை எதிர்பார்க்கலாம்.

யமஹா ரேஇசட்ஆர் மற்றும் ஸ்ட்ரீட் ரேலி ஹைபிரிட் விற்பனைக்கு வந்தது

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் ஹைபிரிட் வசதி பெற்ற ரேஇசட்ஆர் மற்றும் ஸ்ட்ரீட் ரேலி என இரு மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. முன்பாக ஃபேசினோ ஸ்கூட்டரில் ஹைபிரிட் ஆப்ஷனை கொண்டு வந்திருந்தது.

யமஹா 125சிசி ஹைபிரிட் இன்ஜின்

பிஎஸ்-6 இன்ஜினில் கூடுதலாக ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டரை (Smart Motor Generator -SMG) இணைத்துள்ளது. இதன் மூலம் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்கின்ற வசதி மற்றும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை செயல்படுத்துகின்றது. குறிப்பாக, மின்சார மோடடார் உதவியுடன் நிற்கும் போது அல்லது செங்குத்தான சாலை பயணத்தில் சிறிய சக்தியை வழங்குகிறது. பவர் அசிஸ்ட் செயல்பாடு செயல்பாட்டில் இருக்கும்போது கிளஸ்டரில் அறிவிப்பு கிடைக்கின்றது. மூன்று விநாடிகளுக்கு பிறகு அல்லது முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட ஆர்.பி.எம் தாண்டிய பிறகு அல்லது திராட்டலை மூடினால் அசிஸ்ட் வசதி முடக்கப்படும்.

இந்த மாடலில் 8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 10.3 என்எம் டார்க் (முன்பு 9.7 என்எம்) வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் டெக் கொண்ட ரேஇசட்ஆர் டிரம் பிரேக் மாடல் ரூ.76,830 விலையும், டிஸ்க் பிரேக் பதிப்பு ரூ.79,830 ஆகும். ஸ்ட்ரீட் ரேலி வேரியன்ட்டின் விலை ரூ.83,830 (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் டெல்லி).