சென்னை ஆட்டோ ஓட்டுநரின் கின்னஸ் சாதனை

சென்னை ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீஸ் இருசக்கரங்களில் ஆட்டோவை இயக்கி கின்னஸ் சாதனை 2016 புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 4 வருடங்களுக்கு பிறகு எம்.ஜெகதீஸ் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

 ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீசன்
ஜெகதீசன் இயல்பாகவே சிறு வயது முதலே ஸ்ட்ன்ட் செய்வதில் ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார். முழு நேர ஆட்டோ ஓட்டுநராக மாறிய பின்னர் ஆட்டோவில் ஸ்டன்ட் செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளார்.
பகல் நேரங்களில் ஸ்டன்ட் செய்யாமல் இரவில் காலியாக உள்ள சாலைகளில் பயற்சி செய்துள்ளார். பல நாட்களின் பயற்சிக்கு பின்னர் கின்னஸ் சாதனைக்காக முயற்சி செய்ததில் கடந்த பிப்ரவரி 2011ம் ஆண்டில் மும்பையிலுள்ள ஜூகு விமான ஓடுதளத்தில் கின்னஸ் அதிகாரிகள் முன் இந்த சாதனையை செய்துள்ளார்.

 ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீசன்
80 கிமீ வேகத்தில் வீலை தூக்குவதனால் சிறப்பாக செயல்பட முடிகின்றதாம். இருசக்கரங்களில் இயக்கும்பொழுது வாகனத்தின் முழு கன்ட்ரோல் ஸ்டீயரிங்கில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கின்னஸ் சாதனை நிபந்தனைகள் ;
  • குறைந்தபட்சம் 1 கிமீ இருசக்கரங்களில் ஓட்ட வேண்டும்
  • ஒருமுறை கூட கீழே இறக்காமல் இயக்க வேண்டும்.
ஜெகதீசன் சாதனை
சுமார் 2.2 கிமீ இரு சக்கரங்களிலே இயக்கி கின்னஸ் சாதனை செய்துள்ளார்.